நாள் : Sunday, August 30, 2026
--:--:--
👁️
Fund Request

வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் ஆறு பல்கலைக்கழக மாணவர்கள் , கல்விக்காக இன்னொருவரின் உதவிகளை வேண்டி நிற்கிறார்கள்.

காரைநகர் அபிவிருத்தி சபை செய்தி.

காரைநகரில் இருந்து இந்த ஆண்டு 20 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியிருந்தார்கள்.

அவர்களில் ஆறு மாணவர்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும், கல்விக்காக இன்னொருவரின் உதவிகளை வேண்டி நிற்கிறார்கள்.

வெளிநாடுகளில் இயங்கும் காரை அமைப்புக்கள் இயங்கியும் இயங்காமலும் ஏதோ தாம் வாழும் நாடுகளில் ஊரின் பெயரால் கூத்தும் கும்மாளமும் தேவை என்று அவர்களுக்குள்ளேயே போட்டியும் பொறாமைகளின் காரணமாக ஏதோ சமூகவலைத்தளங்களில் குறூப் வைத்து கும்மி அடித்துக்கொண்டிருக்கிறார்கள்.

வெளிநாடுகளில் கனடா, இலண்டன், பிரான்ஸ், சுவிஸ், அவுஸ்திரேலியா, ஜேர்மன், நாடுகளில் காரைநகர் என்ற ஊரின் பெயரால் இயங்கும் அமைப்புக்கள் சமூக வலைத்தளங்களில் மட்டும் குறூப் சேர்த்து இநங்கிக்கொண்டிருக்கின்றன.

குறூப்பில் இல்லாத எவருக்கும் அந்தந்த அமைப்புக்கள் இயங்குதா அல்லது கலைக்கப்பட்டு விட்டதா அல்லது இழுத்து மூடிவிட்டார்களா என்று தெரியாது அல்லது தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை.

ஆனாலும் காரைநகர் அபிவிருத்தி சபை ‘இன்னும் கொஞ்சம் மிச்சம் இருக்கிறது..’

இந்த ஆண்டு பல்கலைக்கழக அனுமதி பெற்ற 20 மாணவர்களில் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் 6 மாணவர்களில் ஒருவர் காரைநகர் அபிவிருத்தி சபையை நம்பி ஒரு கம்பியூட்டர் வேண்டி தருவீர்களா என்று உரிய முறையில் தொடர்பு கொண்டு கேட்டுள்ளார்.

கடவுளே ஆனாலும் கேட்டால் தான் வரம் கொடுப்பார்…. என்பதற்கு இணங்க காரைநகர் அபிவிருத்தி சபை அந்த மாணவருக்கான கேட்ட உதவியை செய்ய முன்வந்திருந்தது.

இரண்டு இலட்சத்து 67 ஆயிரம் ரூபா பெறுமதியிலான மடிக்கணனி ஒன்றை வேண்டிக்கொடுக்க முன்வந்திருந்தது. அதற்கான அறிவித்தலையும் வெளியிட்டிருந்தது. அடுத்தவாரம் பல்கலைக்கழகம் ஆரம்பமாகவிருப்பதால் கம்பியூட்டருக்காக காத்திருக்கும் மாணவருக்கு கம்பியூட்டர் வேண்டிக்கொடுக்க இதுவரை ஒரு இலட்சத்து 75 ஆயிரம் ரூபா மட்டும் தானாம் வெளிநாடுகளில் இருந்து நால்வர் கொடுத்திருக்கிறார்கள்.

ஆனாலும் இன்னும் ‘லேட்’ இல்லை இப்பவும் கொடுத்து அனுப்பலாம். முயற்சி செய்து பாருங்கள். அல்லது உங்கள் நாடுகளில் உங்கள் ஊரின் பெயரால் சமூகவலைத்தளங்களில் குறூப்பில் ‘busy’ ஆக இருங்கள்.

கடவுள் காப்பாத்துவார்.

Leave a Reply

மேலதிக செய்தி | More News & Related Stories

காரைநகர் பெரியடைப்பு வீட்டுத்திட்ட உதவிக்கான இறுதி வேண்டுகோள். 26.08.2026

காரைநகர் பெரியடைப்பு வீட்டுத்திட்ட உதவிக்கான இறுதி வேண்டுகோள். 26.08.2026 இந்த ஆண்டு(2026) ஜனவரி 21ம் திகதி காரைநகர் பெரியடைப்பில்...

பூனைக்கு மணி கட்டுவது யார்..? என்று சிந்திக்காதீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் சிறிய தொகையாக 100 ரூபா(இலங்கை ரூபா) ஆக இருந்தாலும் காரைநகர் அபிவிருத்தி சபையின் இந்த பணியினை நம்பினால் கொடுங்கள்.

பூனைக்கு மணி கட்டுவது யார்..? என்று சிந்திக்காதீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் சிறிய தொகையாக 100 ரூபா(இலங்கை ரூபா) ஆக...

ஈழத்து சிதம்பரம் கும்பாபிஷேகம் நடைபெற்று மண்டலாபிஷேகமும் நிறைவுற்று எல்லாம் நல்லபடியாக நடைபெற்று முடிந்துள்ளது.

ஈழத்து சிதம்பரம் கும்பாபிஷேகம் நடைபெற்று மண்டலாபிஷேகமும் நிறைவுற்று எல்லாம் நல்லபடியாக நடைபெற்று முடிந்துள்ளது. (அது வேற இது வேற…)...

செந்தில் அண்ணாவின் ‘உயிர் காப்போம்’ சாவடி. மனிதம் இன்னும் உயிர்வாழ்கிறது.

பொதுப்பணி, தான தர்மங்களை நம்புபவர்கள் இதையும் ஒரு முறை பார்க்க வேண்டும். இவர்களைப்போன்றவர்களால் தான் மனிதம் இன்னும் உயிர்வாழ்கிறது....

Advertisements

NSK Bus Booking Tel : 0777 290 605
NSK Bus Booking Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605