ஆறுமுகம் தவராஜா | இறைவன் அடியில் 03.05.2010
ஆறுமுகம் தவராஜா அன்னை மடியில் 24.11.1957 இறைவன் அடியில் 03.05.2010
தவராசா! தவராசா! தவராசா!
உமதருமை நண்பர்கள் கதறுவது கேட்கிறதா!
நடுநிசியில் வந்திட்ட உன் மரணச் செய்தி
எம் நெஞ்சைப் பிளந்ததையா தவராசா! நட்பிற்கு வரைவிலக்கணம் நீயானாய் தொலைத் தொடர்பகத்தில் உதவிப் பொறியியலாளராய் பதவிகொண்டு தொலைதூரம் இருந்தோரைப் பேசவைத்தாய் இன்று நீயோ மீளாத் தொலைதூரம் சென்றுவிட்டாய் உம் பிரிவு எம்நெஞ்சை வாட்டுதையா விதிப்பயனை நோவதன்றி வழியின்றி தவிக்கின்றோம்.
உமது பிரிவால் துயரக்கடலில் மூழ்கித் தவிக்கும் மனைவி, புத்திரர்கள், உற்றார், உறவினர்கள் அனைவருக்கும் எம் ஆறுதலையும், அனுதாபத்தையும் தெரிவித்து அன்னாரின் ஆத்மா சாந்தியடைய ஈழத்துச் சிதம்பர நடராசப் பெருமானைப் பிரார்த்திக்கின்றோம்
கனடா, அமெரிக்கா வாழ் உமதருமை நண்பர்கள்


Leave a Reply
You must be logged in to post a comment.