‘காரைநகர் சேவையாளர்’ கெளரவம் வழங்கும் நிகழ்வு 05.01.2025 ஞாயிற்றுக்கிழமை.
எனது ஊர் காரைநகர் , karainews.com வழங்கும் நான்காவது சேவையாளர் கெளரவத்தின் போது நான்கு சேவையாளர்கள் கெளரவிக்கப்படுகிறார்கள்.
கல்வி, ஆன்மீகம், சுகாதாரம் மருத்துவம், பொதுப்பணிகளல் காரைநகர் மக்களின் மனங்களில் நிறைந்து வாழும் மண்ணின் மகத்துவம் பெற்றவர்கள் கெளரவிக்கப்படுகிறார்கள்.
களபூமி மண்ணின் மைந்தன் காரைநகரின் சேவையாளன் கல்விப்பணிக்காக காரை இந்துவில் அர்ப்பணிப்போடு சேவையாற்றிவரும் திரு.சிதப்பரப்பிள்ளை நேசேந்திரம், மற்றும் காரைநகர் சமூக முன்னேற்றத்தின் முன்னோடியாக பொது அமைப்புக்களில் தன்னலம் பாராது சமூக முன்னேற்றத்தை மட்டும் கருத்தில் கொண்டு இடைவிடாது மக்கள் பணியே மகேசன் தொண்டாக அனைத்து சமூக நல்லிணக்கத்திற்காகவும் ஒன்பது பொது அமைப்புக்கள் ஊடாக காரை மக்களின் உள்ளங்களில் தன்னலமற்ற சேவையாற்றிவரும் திரு. கந்தசாமி இராஜசந்திரன்(அப்பு அண்ணை) அவர்களும் ‘காரைநகர் சேவையாளர்கள்’ கெளரவம் பெறுகிறார்கள். 05.01.2025 காரை மண்ணிற்காக தன்னலம் பாராது சேவையாற்றும் ஆன்மீகம், சுகாதாரம் ஆகிய பணிகளில் மக்கள் மனங்களில் நிலைபெற்றிருக்கும் சேவையாளர்களை கெளரவிக்கின்றது.
அத்துடன் கல்வி, விளையாட்டு, தமிழ் மொழி, சமயம் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் பாடசாலை மாணவர்களிற்கு ஊக்குவிப்புக்களை வழங்கி காரை மண் பெருமை கொள்ளும் விழாவாக நடைபெறவுள்ளது ‘எனது ஊர் காரைநகர்‘ karainews.com அனுசரணை வளங்கி காரைநகர் அபிவிருத்தியை ஊக்குவிக்கும் உன்னத விழா.
திருவெம்பாவை உற்சவ காலத்தின் இரண்டாவது நாளான 05.01.2025 அன்று காரைநகரில் மகத்தான விழா. நான்காவது தடவையாக இதுவரை 37 காரைநகர் சேவையாளர்கள் கெளரவம் பெற்றுள்ளார்கள் 2015.01.05 இல் மேலும் 4 சேவையாளர்கள் கெளரவம் பெறவுள்ளார்கள்.



Leave a Reply
You must be logged in to post a comment.