நாள் : Sunday, August 16, 2026
--:--:--
👁️
AGM

காரைநகர் அபிவிருத்தி சபையின் இரண்டரை ஆண்டுகால தற்காலிக நிர்வாகம் நிறைவிற்கு வந்தது. 28.09.2025

காரைநகர் அபிவிருத்தி சபையின் இரண்டரை ஆண்டுகால தற்காலிக நிர்வாகம் நிறைவிற்கு வந்தது.

28.09.2025 இன்று ஞாயிற்றுக்கிழமை காரைநகர் கலாசார மண்டபத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இரண்டரை ஆண்டுகளிற்கு பின்னர் 96 தகுதியுடைய அங்கத்தவர்களில் 55 அங்கத்தவர்கள் கலந்து கொண்டு பொதுக்கூட்டத்தை தகுதியுடைய பொதுக்கூட்டமாக ஆதரவு வழங்கியிருந்தார்கள்.

– காரைநகர் பிரதேச செயலகத்தின் சார்பாக கலாசார உத்தியோகத்தர்(SSO) கலந்து கொண்டு நடந்தவைகளை ஆவணப்படுத்தியிருந்தார்.

காரைநகர் அபிவிருத்தி சபையின் முன்னாள் நிர்வாக உறுப்பினர்களும், கல்விமான்கள், வர்த்தகர்கள் மற்றும் அமைப்பினை வழிநாடாத்தவும் நிரந்தரமான நிர்வாகத்தை தெரிவு செய்து காரைநகர் அபிவிருத்தி சபையை நிலைநிறுத்தவும் மூத்த உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

திரு.மகாராணி சோமசேகரம்பிள்ளை, திரு.சீமாட்டி சற்குணம், கஜமுகன் ஸ்ரோர்ஸ் திரு.E.S.P. நாகரத்தினம், கணேசன் ஸ்ரோர்ஸ் திரு.சிவநி, திரு.அலங்காரம் தம்பிராசா, பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை, ஆசிரியர் திரு.திருப்புகழூர்சிங்கம், திரு. பிரபா மாஸ்ரர், Dr. நடராஜா மற்றும் முன்னாள் தவிசாளர் திரு.ஆனைமுகன், தற்போதைய பிரதேச சபை உபதவிசாளர் திரு.ஆண்டிஐயா விஜயராசா மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் திரு. M.S. செந்தூரன், திரு.பரணிதரன், திரு.சிவகுமார்(ஆனந்தன்), புகலி சிவசுப்பிரமணிய குருக்கள் ஐயா மற்றும் கொழும்பு, அநுராதபுரம் ஆகிய நகரங்களில் இருந்தும் என 55 தகுதியுடை அங்கத்தவர்கள் கலந்து கொண்டு சாட்சியாக பொதுக்கூட்டம் நடைபெற்றது.

– புதிய திருத்திய யாப்பு மேலும் சில திருத்தங்களுடன் அங்கீகரிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

– நிர்வாக தெரிவின் போது ஒரு சிலர் தமது கருத்தை முன்வைத்ததோடு மட்டுமல்லாது அதனையே பொதுச்சபை ஏற்றுக்கொள்ள வேண்டும் என அடாவடியாக நடந்து கொண்டு கூட்டத்தை கலைக்க முயன்றனர். ஆனாலும் செயலிலும் செயற்பாட்டிலும் ஆர்வமுடையோர் தமது விருப்பு வெறுப்புகளிற்கு அப்பாலும் காரைநகர் அபிவிருத்தி சபைக்கு நிரந்தர நிர்வாகம் அமையப்பெற வேண்டும் என்னும் நோக்கில் அமைதி காத்து நிரந்தரமான 15 அங்கத்தவர்கள் கொண்ட நிர்வாக சபையை அமைத்துக்கொண்டார்கள்.

– ஒரு சிலர் ‘தாம் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள்’ என்று ஜனநாயகத்தை பேணாது இறுதிவரை குழப்புவதிலும், தனிப்பட்ட சுயநலன்களிற்காக தன்னிச்சையாக செயற்பட விரும்பிய ஒரு சிலர் பொதுக்கூட்டத்தை கழேபகரமாக்குவதிலும், புதிய நிர்வாகத்தை தெரிவு செய்யவிடாது குழப்பி, காரைநகர் அபிவிருத்தி சபையை தொடர்ந்தும் செயற்படாது வைக்க மட்டுமே குறியாக கொண்டு செயற்பட்டுள்ளார்கள்.

– கடந்த இரண்டரை ஆண்டுகால தற்காலிக நிர்வாக சபைக்கு இறுதியாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதுடன், தலைவர், செயலாளர், பொருளாளர் உட்பட 15 நிர்வாக அங்கத்தவர்கள் (கோரம் உடைய 55/96 ) பொதுக்கூட்டத்தின் போது காரைநகர் பிரதேச செயலகத்தின் சார்பில் கலந்து கொண்ட கலாசார உத்தியோகத்தர்(SSO) சாட்சியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.

– மேற்படி நடைபெற்ற பொதுக்கூட்டத்தின் நேரடி ஒளிபரப்பு முழுமையாகவும் சிலரால் பகுதி பகுதிகளாகவும் உடனுக்குடன் வெளியாகியிருந்ததும் ஒரு சில மணி நேரங்களில் நான்காயிரத்திற்கு மேற்பட்டவர் பார்வையிட்டுள்ளார்கள் என்பதும் கவனிக்கத்தக்கது.

Leave a Reply

மேலதிக செய்தி | More News & Related Stories

காரைநகர் வியாவில் ஐயனார் கோயில் மகோற்சவ தேர்த்திருவிழா 11.08.2026 இன்று செவ்வாய்கிழமை நடைபெற்றது. இலங்கையில் ஆடி அமாவாசை 12.08.2026 புதன்கிழமை என்பதும் அன்றைய தினம் வியாவில் தீர்த்தோற்சவம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

காரைநகர் வியாவில் ஐயனார் கோயில் மகோற்சவ தேர்த்திருவிழா 11.08.2026 இன்று செவ்வாய்கிழமை நடைபெற்றது. இலங்கையில் ஆடி அமாவாசை 12.08.2026...

கனடா ரொறன்ரோ மாநகரின் ஸ்காபுரோ பகுதியில் சொந்தமாக கோயில் கொண்டு விளங்கும் கனடா கந்தசுவாமி ஆலய மகோற்சவ தேர்த்திருவிழா. 10.08.2026 திங்கள்கிழமை. நாளை செவ்வாய்கிழமை ஆடி அமாவாசை தினத்து தீர்த்தோற்சவமாகக் கொண்டு நடைபெறும் ரதோற்சவம்.

கனடா ரொறன்ரோ மாநகரின் ஸ்காபுரோ பகுதியில் சொந்தமாக கோயில் கொண்டு விளங்கும் கனடா கந்தசுவாமி ஆலய மகோற்சவ தேர்த்திருவிழா....

‘காரைநகர் சேவையாளர் கெளரவம் 2026’ – ‘எனது ஊர் காரைநகர்’ karainews.com நடாத்தும் ஐந்தாவது சேவையாளர் கெளரவம் தொடர்பான அறிவித்தல்.

‘காரைநகர் சேவையாளர் கெளரவம் 2026’ ‘எனது ஊர் காரைநகர்’ karainews.com நடாத்தும் ஐந்தாவது சேவையாளர் கெளரவம் தொடர்பான அறிவித்தல்....

Advertisements

NSK Bus Booking Tel : 0777 290 605
NSK Bus Booking Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605