நாள் : Monday, August 17, 2026
--:--:--
👁️
Awareness

காரைநகர் அபிவிருத்தி சபை தொடர்பான விளக்கமும் கலந்துரையாடலும் 24.08.2025 எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இலங்கை நேரம் மாலை 7.00 மணிக்கு சமூகவலைத்தளம் ஊடாக நடைபெறும். (கனடா நேரம் ஞாயிறு காலை 9.30 am).

காரைநகர் அபிவிருத்தி சபை தொடர்பான விளக்கமும் கலந்துரையாடலும் 24.08.2025 எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இலங்கை நேரம் மாலை 7.00 மணிக்கு சமூகவலைத்தளம் ஊடாக நடைபெறும். (கனடா நேரம் ஞாயிறு காலை 9.30 am).

கடந்த மாதம் 20.07.2025 அன்று நடைபெற்ற கலந்துரையாடலின் தொடர்ச்சியாக நடைபெறவுள்ளது. கடந்த கலந்துரையாடலில் காரைநகர் அபிவிருத்தி சபையின் தற்போதைய தற்காலிக நிர்வாக சபையின் செயலாளர், பொருளாளர் ஆகியோர் கலந்து கொள்ளாத நிலையிலும், பல விதமான விளக்கமற்ற நிதி செயற்பாடுகள், செயலாளரின் தன்னிச்சையான செயற்பாடுகள் தொடர்பாகவும், காரைநகர் அபிவிருத்தி சபையின் எதிர்கால வளர்ச்சி கருதிய வகையிலும், தொடரும் இரண்டு நீதிமன்ற வழக்குகள் தொடர்பாகவும், மற்றும் மேலதிகமாக தற்போதைய தற்காலிக நிர்வாக சபை மீது தன்னிச்சையான செயற்பாடுகளை காரணம் காட்டி மேலும் ஒரு வழக்கு ஒன்றை பதிவு செய்ய சமூக ஆர்வலர் ஒருவர் தயாராக உள்ள நிலையிலும் சுமூகமாக காரைநகர் அபிவிருத்தி சபையின் பிணக்குகளிற்கு தீர்வு காணவும் இக்கலந்துரையாடல் முக்கியமானதாகும்.

தற்போதைய தற்காலிக நிர்வாக சபையின் செயலாளர் இந்த வாரம் தனது இராஜினாமாவை காரைநகர் DS காரியாலயத்தில் கையளித்துள்ளதும், கடந்த இரண்டு ஆண்டு கால நிர்வாக செயற்பாடுகளை தன்னால் நிறைவேற்ற முடியாமைக்கு DS காரியாலயத்தின் மீது காரணங்களை சுமர்த்தியுள்ள போதிலும், நேற்றைய தினம் DS காரியாலயத்தில் இருந்து அதற்குரிய விளக்கமும் பதிலும் உத்தியோகபூர்வமாக வளங்கப்பட்டுள்ளதும் ‘எனது ஊர் காரைநகர்’ எனக்கும் கிடைக்கப்பட்டுள்ளதும் அவை தொடர்பாக காரைநகர் மக்களும், காரைநகர் அபிவிருத்தி சபை அங்கத்தவர்கள் மற்றும் காரை மண்ணின் அபிவிருத்தியில் அக்கறையுடன் செயற்படுமவர்களும் சந்தேகத்திற்கு இடமின்றி காரைநகர் அபிவிருத்தி சபையின் செயற்பாடுகள், மற்றும் நிதி தொடர்பான கடந்த இரண்டு வருட கணக்குகள் தொடர்பாகவும் அறிந்து கொள்ளப்படவேண்டியது கட்டாயமாகும்.

காரைநகர் அபிவிருத்தி சபையின் தற்காலிக தற்போதைய திரு.வி.ஹம்சன் தலைமையிலான நிர்வாகத்தில் செயலாளர் திரு.பொ.பரந்தாமன், பொருளாளர் திரு.மு.பரம்தில்லைராசா(சின்னத்தம்பி) ஆகியோர் நிர்வாகத்திற்கு உட்பட்டு செயற்பட தவறிவருகிறார்கள் என்பதும் கணக்கு வழக்குகள் வெளிப்படையாக சந்தேகத்திற்கு உட்பட்ட வகையில் தலைவரிற்கே உத்தேச விபரங்கள் கூட தெரியாத வகையிலும் ஆனாலும் மாதாந்தம் நிர்வாக சபை கூட்டங்கள் நடைபெற்று வருவதாகவும் அறியப்படுவதாலும், தேவையற்ற சந்தேகங்கள், மேற்கொண்டு நீதிமன்ற வழக்குகளை தவிர்பதற்காகவும், தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகியோர் தமது தமது நல்லெண்ணத்தையும் நாணயம், நம்பிக்கையினை காரை மக்களிற்கு உணரவைக்கவும் 24.08.2025 எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள கலந்துரையாடலில் கலந்து கொள்ள வேண்டியது கட்டாயமானதாகும்.

காரைநகர் அபிவிருத்தி சபையின் கடந்த இரண்டு ஆண்டுகால தற்காலிக நிர்வாக சபையின் செயற்பாடுகள் தொடர்பாக பலவித முறைப்பாடுகள், வதந்திகள் நிர்வாக முறைகேடுகள் தொடர்பாக நிர்வாக சபை உறுப்பினர்கள் மீது தனிப்பட்டளவிலும் நிர்வாகத்தின் மீதும் மக்களிற்கு அவநம்பிக்கை ஏற்பட்டுள்ள நிலையில் அந்தந்த முறைப்பாடுகள் மற்றும் நிர்வாகத்தை முன்கொண்டு செல்ல பொதுப்பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் கலந்து கொண்டு தெளிவுபடுத்த வேண்டிய கட்டாயம் உண்டு.

உண்மைத்தன்மையை உணரவைக்க முடியாத நிலையில் மேலும் நீதிமன்ற வழக்குகள் மற்றும் தேவையற்ற பல மனவுழைச்சல்களிற்கு பொதுப்பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் ஆளாகவேண்டியுள்ளது. பொதுப்பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் வெளிப்படை தன்மையை பின்பற்ற தவறுவதும், நிர்வாகத்திற்கும், அங்கத்தவர்களிற்கும் மதிப்பும் மரியாதையையும் வளங்க தவறுவதுடன் தமது சொந்த விருப்பு வெறுப்புக்கு ஆளாகி காரைநகர் அபிவிருத்தி சபையினை பத்தோடு ஒன்றாக தண்ணி வியாபாரம் செய்யும் தனிப்பட்ட ஒரு நிறுவனமாக அதிலும் மோசமாக செயற்பட்டுக்கொண்டிருக்கிறது.

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 24.09.2025 இலங்கை நேரம் மாலை 7 PM மணிக்கு(கனடா நேரம் ஞாயிறு காலை 9.30AM) சமூக வலைத்தளம் ஊடாக நடைபெறும். இதில் கலந்து கொள்ள உலகத்தில் எந்த நாட்டில் இருந்தாலும் உங்களது தொலைபேசி இலக்கத்தை +1 416 821 8390 என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். 24.08.2025 சனிக்கிழமைக்கு முன்னதாக அனுப்பி வைப்பவர்கள் மட்டுமே இணைந்து கொள்வதை உறுதிப்படுத்தலாம்.

கலந்துரையாடலில் வேறுவிடயங்கள் தொடர்பாகவும், அவதூறு, ஆபாசம், ஒவ்வாத வார்த்தை பிரயோகம், தனிப்பட்ட தாக்குதல்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. எவ்விதமுன்னறிவித்தலும் இன்றி உடனடியாக கலந்துரையாடலில் இருந்து வெளியேற்றப்படுவார்கள். எக்காரணம் கொண்டும் மீள இணைக்கப்படமாட்டார்கள். நன்றி.

Leave a Reply

மேலதிக செய்தி | More News & Related Stories

காரைநகர் வியாவில் ஐயனார் கோயில் மகோற்சவ தேர்த்திருவிழா 11.08.2026 இன்று செவ்வாய்கிழமை நடைபெற்றது. இலங்கையில் ஆடி அமாவாசை 12.08.2026 புதன்கிழமை என்பதும் அன்றைய தினம் வியாவில் தீர்த்தோற்சவம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

காரைநகர் வியாவில் ஐயனார் கோயில் மகோற்சவ தேர்த்திருவிழா 11.08.2026 இன்று செவ்வாய்கிழமை நடைபெற்றது. இலங்கையில் ஆடி அமாவாசை 12.08.2026...

கனடா ரொறன்ரோ மாநகரின் ஸ்காபுரோ பகுதியில் சொந்தமாக கோயில் கொண்டு விளங்கும் கனடா கந்தசுவாமி ஆலய மகோற்சவ தேர்த்திருவிழா. 10.08.2026 திங்கள்கிழமை. நாளை செவ்வாய்கிழமை ஆடி அமாவாசை தினத்து தீர்த்தோற்சவமாகக் கொண்டு நடைபெறும் ரதோற்சவம்.

கனடா ரொறன்ரோ மாநகரின் ஸ்காபுரோ பகுதியில் சொந்தமாக கோயில் கொண்டு விளங்கும் கனடா கந்தசுவாமி ஆலய மகோற்சவ தேர்த்திருவிழா....

‘காரைநகர் சேவையாளர் கெளரவம் 2026’ – ‘எனது ஊர் காரைநகர்’ karainews.com நடாத்தும் ஐந்தாவது சேவையாளர் கெளரவம் தொடர்பான அறிவித்தல்.

‘காரைநகர் சேவையாளர் கெளரவம் 2026’ ‘எனது ஊர் காரைநகர்’ karainews.com நடாத்தும் ஐந்தாவது சேவையாளர் கெளரவம் தொடர்பான அறிவித்தல்....

Advertisements

NSK Bus Booking Tel : 0777 290 605
NSK Bus Booking Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605