நாள் : Monday, September 7, 2026
--:--:--
👁️
Awareness

பத்து ஆண்டுகளை நிறைவு செய்துள்ள காரைநகர் பாடசாலைகளிற்கான ஒரு கோடி இருபது இலட்சம் நிரந்தர வைப்பு நிதியம். (05.05.2015 – 05.05.2025).

பத்து ஆண்டுகளை நிறைவு செய்துள்ள காரைநகர் பாடசாலைகளிற்கான ஒரு கோடி இருபது இலட்சம் நிரந்தர வைப்பு நிதியம். (05.05.2015 – 05.05.2025).

கனடா காரை கலாசார மன்றத்தின் திரு.தம்பிஐயா பரமானந்தராசா தலைமையிலும் திரு.தீசன் திரவியநாதன் பதில் செயலாளராகவும், திரு.திருநாவுக்கரசு பேரின்பராஜா பொருளாளராகவும் கொண்ட நிர்வாக சபை காரைநகர் பாடசாலைகள் அனைத்திற்கும் தலா பத்து இலட்சம் ரூபாய்கள் காரைநகர் அபிவிருத்தி சபையின் பெயரில் வைப்பிலிட்டு அதன் வட்டிப்பணம் நேரடியாக ஒவ்வொரு பாடசாலைகளின் வங்கிக்கணக்குகளிற்கு வைப்பில் இடப்பட்டும் கடந்த பத்து ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றது.

இதன் பிரகாரம் கடந்த பத்து ஆண்டுகளில் காரைநகர் பாடசாலைகள் ஒரு கோடி முப்பது இலட்சம் ரூபாய்களை வங்கி வட்டியாக இதுவரை பெற்றுள்ளன.

2014ம் ஆண்டு திரு. தம்பிஐயா பரமானந்தராஜா தலைமையில் தெரிவு செய்யப்பட்ட கனடா காரை கலாசார மன்றத்தின் நிர்வாக சபையில் செயலாளர்களாக போட்டியிட்டு தெரிவான செயலாளர் மற்றும் உபசெயலாளர்கள் இருவரும் அடுத்தடுத்து இராஜினாமா செய்ததையடுத்து 2014 செப்டெம்பர் மாதம் அதே நிர்வாகத்தில் நிர்வாகசபை உறுப்பினராக பணியாற்றிய திரு.தீசன் திரவியநாதன் பதில் செயலாளராக நிர்வாக சபை உறுப்பினர்களால் தெரிவு செய்யகயப்பட்டார்.

அதனையடுத்து காரைநகர் பாடசாலைகளின் அடிப்படை அத்தியாவசிய தேவைகளை நிரந்தரமாக தீர்த்து வைப்பதற்காக காரைநகர் பாடசாலைகள் ஒவ்வொன்றுக்கும் தலா பத்து இலட்சம் ரூபாய்கள் நிரந்தர வைப்பில் இட்டு வழங்குவதாக நிர்வாகம் தீர்மானித்தது.

2014ம் ஆண்டு டிசம்பர் மாதம் கனடா காரை கலாசார மன்றம் நடாத்திய “காரை வசந்தம் 2014” காரைநகர் பாடசாலைகளிற்கான நிரந்தர வைப்பு நிதிக்கான நிதி சேர்க்கைக்காக நடைபெற்றதும் அதன் மூலம் 20,000 டொலர்களிற்கு மேற்பட்டளவில் இலாபமாக பெறப்பட்டது. அத்துடன் கனடாவில் வாழும் காரைநகர் குடும்பங்களை சேர்ந்த 300 க்கும் மேற்பட்ட காரைநகர் மக்களின் வீடுகளிற்கு நேரடியாக சென்ற நிர்வாக சபை உறுப்பினர்கள் காரைநகர் பாடசாலைகளின் அப்போதைய நிலமைகளை தெரிவித்து அடிப்படை தேவைகளின் அத்தியாவசியத்தை புரிய வைத்தனர். 2015 ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரையான 5 மாத காலப்பகுதியில் கனடாவில் வாழும் காரைநகர் மக்கள் 300 க்கும் மேற்பட்ட மக்களின் வீடுகளின் கதவுகளை தட்டி காரைநகர் பாடசாலைகளிற்கான நிதியை சிறுக சிறுக சேர்த்துக்கொண்டார்கள்.

கனடா காரை கலாசார மன்றம் ஆரம்பிக்கப்பட்ட 1989 ம் ஆண்டு முதல் 2014 வரையான காலப்பகுதி வரை கனடா காரை கலாசார மன்றத்தினை நிர்வகித்த பலரும் தம்மால் கடந்த 15 ஆண்டுகளாகவும் மொத்தமாக ஊரிற்கு வளங்கிய நிதிகளை விடவும் ஒரே ஆண்டில் திரு.தம்பிஐயா பரமானந்தராசா தலைமையிலான நிர்வாகத்தினால் ஒரு கோடி இருபது இலட்சம் ரூபாய்களை சேர்த்து வழங்க முடியாது என கருதினார்கள், ஒரு சந்தர்ப்பத்தில் சாத்தியமாகும் என்பதனை உணர்ந்து கொண்டு கனடாவில் காரைநகர் மக்களிடத்தில் வதந்திகளை பரப்பிதுடன், தீசன் திரவியநாதன் அவர்களால் திரு.தியாகராசா பரமேஸ்வரனிற்காக பணம் சேர்ப்பதாகவும், பாடசாலைகளிற்கு இந்த நிதி செல்லாது எனவும் பிரசாரங்களில் நேரடியாக ஈடுபட்டனர்.

2015.05.10ம் திகதி அன்று திரு.தம்பிஐயா பரமானந்தராஜா தலைமையிலான நிர்வாக சபை நிறைவு பெறவேண்டியதையடுத்து காரைநகர் பாடசாலைகளின் நிரந்தர வைப்புக்காக கனடா வாழ் காரைநகர் மக்களின் ஒவ்வொரு வீடுகளிற்கும் சென்று சேர்த்த நிதி 80 இலட்சங்கள் வரை மட்டுமே சேர்ந்த நிலையில், ஏற்கனவே இத்திட்டத்திற்காக நிதி உதவி வளங்க பதிவு செய்தவர்கள் பலரது 30,000 டொலர்கள் வரையான நிதியினை வளங்க முடியாத நிலைக்கு முன்னாள் மன்றத்தின் நிர்வாகிகளும் கனடா காரை கலாசார மன்றத்தை வைத்து 2014 வரை தமது பிழைப்பை நடாத்தியவர்களும் தடையாக செயற்பட்டு வந்தார்கள்.

இந்த நிலையில் அப்போதைய நிர்வாக சபையில் நிர்வாக அங்கத்தவர்களாக கடமையாற்றியவர்களும் எதிர்பாராத செயற்பாடாக பதில் செயலாளராக கடமையாற்றிய திரு. தீசன் திரவியநாதன் 20,000 டொலர்கள்(25 இலட்சம் ரூபாய்கள்) வளங்கவும் தலைவராக கடமையாற்றிய திரு.தம்பிஐயா பரமானந்தராஜா 8 இலட்சம் ரூபாய்களை வளங்கவும் கனடா காரை கலாசார மன்றத்தினால் செயற்படுத்த முடியாது என கருதிய செயற்பாடானது 05.05.2015 கடவுளின் கைங்கரியத்தினால் பதில் செயலாளர் தீசன் திரவியநாதன் அவர்களது பிறந்த நாள் அன்று திட்டமிட்டபடி நிறைவேற்றி வைக்கப்பட்டது.

கனடா காரை கலாசார மன்றத்தின் ஊடாக காரைநகர் பாடசாலைகளிற்கென திரு. தம்பிஐயா பரமானந்தராஜா தலைமையிலான நிர்வாக சபையினால் சேர்க்கப்பட்ட நிதியினை 30 இலட்சம் ரூபாய்கள் வரையான நிதி பற்றாக்குறை காரணமாக மன்றத்தில் விட்டுச்செல்லவும், அடுத்து வரும் நிர்வாகம் அதனை செயற்படுத்தும் எனவும், அல்லது அதுவரை சேர்த்த பணத்தையே அனைத்து பாடசாலைகளிற்கும் பகிர்ந்தளிக்கவும், அல்லது குறிப்பிட்ட சில பாடசாலைகளை தவிர்த்து 8 பாடசாலைகளிற்கு மட்டுமே சேர்த்த நிதியை வளங்கி 10.05.20215 அன்று திரு.தம்பிஐயா பரமானந்தராஜா தலைமையிலான நிர்வாக சபை கலைந்து செல்லும் என கருதியவர்களிற்கு 05.05.2015 அன்று அன்றைய நிர்வாக சபையில் பணியாற்றியவர்கள் உட்பட பலரிற்கும் ஆச்சரியமாக கிடைத்த செய்தியும் படங்களும் காரைநகரில் இருந்து வந்திருந்தது.

05.05.2015 அன்று கனடா காரை கலாசார மன்றத்தின் திரு.தம்பிஐயா பரமானந்தராஜா தலைமையிலான நிர்வாக சபை 12 பாடசாலைகளிற்கும் ஒருகோடி இருபது இலட்சம் ரூபாய்களை நிரந்தர வைப்பில் இட்டு வளங்கியது என்ற செய்தி கனடாவில் பலரிற்கும் நம்ப முடியாத செய்தியாக இருந்தது.

மேற்படி திட்டமிட்ட செயலை 8 மாத பதில் செயலாளர் பதவியில் இருந்து செய்து முடித்து 10.05.2015 அன்று திரு.தம்பிஐயா பரமானந்தராசா தலைமையிலான நிர்வாகம் கூட்டிய பொதுக்கூட்டத்தில் 300 பேர்கள் வரையான கனடா வாழ் காரை மக்கள், வரலாற்றில் மன்றத்தின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளாதவர கள் உட்பட கலந்து கொண்டிருந்தனர். அன்றைய பொதுக்கூட்டத்தில் அப்போதைய சுவிஸ் காரை அபிவிருத்தி சபை தலைவரும் சாட்சியாக கலந்து கொண்டிருந்தார்.

பொதுக்கூட்டம் தொடங்கிய மறுநிமிடமே… திரு.தம்பிஐயா பரமானந்தராசா தலைமையிலான நிர்வாக சபை மன்றத்தின் பணத்தை சூறையாடிவிட்டது எனவும், திரு.தியாகராசா பரமேஸ்வரனிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது எனவும், பணம் அனுப்ப படவே இல்லை எனவும், தீசன் திரவியநாதன் 20,000 டொலர் கொடுத்தாரா அல்லது 20,000 ரூபா கொடுத்தாரா எனவும் தம்மை போலவும் தமது கடந்த கால கனடா காரை கலாசார மன்றத்தின் பணிகளின் போது 20 டொலர்கள் கூட கொடுக்க முடியாத முன்னாள் நிர்வாகிகள் பலரும் கொதித்து எழுந்தார்கள்.

அது மட்டுமா நடந்தது…! கனடா காரை கலாசார மன்றத்தின் வரலாற்றில் என்றுமே பொதுக்கூட்டத்திற்கு கூடியிராதளவில் கூடியிருந்த 300 பேர்கள் வரையானோர்கள் நம்ப வைக்கப்பட்டார்கள். அன்று வெளியிடப்பட்ட கணக்கறிக்கை நிராகரிக்கப்பட்டது. நாம் பாடசாலைகளிற்காக ஒரு கோடி இருபது இலட்சம் ரூபாய்கள் வைப்பில் இடவில்லை எனவும் காரைநகர் NSB வங்கியால் காரைநகர் அபிவிருத்தி சபையின் ஊடாக வளங்கிய 12 நிரந்தர வைப்புக்கான certificate பொய்யானது என நம்ப வைக்கப்பட்டார்கள்.

கனடா வாழ் காரைநகர் மக்களில் சிலரும் நம்பினார்கள். அன்றைய பொதுக்கூட்டத்தின் போது திரு. தம்பிஐயா பரமானந்தராசா தலைமையிலான நிர்வாகத்தை, நாம் காரைநகர் பாடசாலைகளிற்காக எடுத்த தீர்மானத்தை நிர்வாக காலம் முடிவடைவதற்கு 5 நாட்கள் முன்னர் முழுமையாக நிறைவேற்றினோம் என்பதை நம்பாதவர்கள் அன்றைய பொதுக்கூட்டத்தில் இருந்து வெளியேற்ற முற்பட்டார்கள். 10.05.2015 அன்று நடைபெற்ற பொதுக்கூட்டம் வீடியோ பதிவு செய்யப்பட்டது. அதன் பதிவை பல தடவைகள் பதில் செயலாளர் என்ற வகையில் பல தடவைகள் மீண்டும் மீண்டும் பார்வையிட்டுள்ளேன்.

பொதுப்பணத்தில் கைவைத்தவர்கள், கடந்த காலங்களில் கனடா காரை கலாசார மன்றத்தின் செயற்பாடுகளிற்காக 20 டொலர்கள் கூட கொடுக்க முடியாதவர்களே திரு. தம்பிஐயா பரமானந்தராசா தலைமையிலான நிர்வாகம் நிறைவேற்றிய காரைநகர் பாடசாலைகளிற்கான ஒருகோடி இருபது இலட்சம் ரூபாய்கள் திட்டத்தினை நம்ப முடியாதளவில் நடந்து கொண்டவர்கள்.

பத்து ஆண்டுகள் முடிவில் இந்த பெரும் வரைதல் அந்த பன்னாடைகளிற்கு சமர்ப்பணம் ஆக்க வேண்டிய தேவை எனக்குள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில் அந்த பன்னாடைகள் உணர்ந்து கொண்டிருப்பார்கள். $20 டொலர்கள் வளங்க முடியாத நிலையில் 15 ஆண்டுகள் கனடா காரை கலாசார மன்றத்தை நிர்வகித்த சிலரால் கனடா காரை கலாசார மன்றத்தின் திரு.தம்பிஐயா பரமானந்தராசா தலைமையிலான நிர்வாகம் ஒருகோடி இருபது இலட்சம் ரூபாய்களை வளங்கியதும் அதன் மூலம் கடந்த பத்து ஆண்டுகளில் மேலும் ஒரு கோடி முப்பது இலட்சம் ரூபாய்களை வட்டியாக வளங்கியுள்ளதையும் காலம் கடந்த நிலையில் புரிந்து கொள்ள வேண்டும். 2915.05.05 அன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உண்மைக்கு புறம்பாக செயற்பட்டு கனடா காரை கலாசார மன்றத்தின் பொதுக்கூட்டத்தினை களேபகரமாக்கியவர்கள் அடுத்து வரும் பொதுக்கூட்டத்தில் பொது மன்னிப்பு கோரவேண்டும், அல்லது அன்றைய தினம் அடாத்தாக நடந்து கொண்டு அடாவடித்தனம் புரிந்தவர்களது செயற்பாடுகளும் வார்த்தை பிரயோகங்களும் பெயர் விபரங்களும் வீடியோவும் 10 வருடங்கள் கடந்த நிலையிலும் தெளிவாக வெளியிடப்படும்.

தொடர்ந்தும் 2015.05.05 நிரந்தர வைப்பில் இட்ட பணம் ஒரு கோடி இருபது இலட்சம் ரூபாய்கள் காரைநகர் அபிவிருத்தி சபையின் பெயரில் பத்திரமாகவும் 100% சட்ட பிரகாரங்களிற்கு உட்பட்டு உள்ளது என்பதையும் மாதன முத்தாவை தலையையாக கொண்டு மன்றத்தை நடாத்த முடியாத நிலையில் உள்ள பன்னாடைகளும் இன்று ஐயம் திரிபுற கண்டு கொண்டுள்ளார்கள் என்பதும், கனடா காரை கலாசார மன்றம் இந்த பன்னாடைகளினால் செயற்படாது போனாலும், காரைநகர் அபிவிருத்தி சபை செயற்படாது போனாலும் காரைநகர் பிரதேச செயலகத்தின் செயலாளரினால் காலங்களை கடந்தும் இன்னும் நூறு வருடங்களிற்கோ அல்லது காரைநகர் பாடசாலைகள் இயங்கும் காலம் முழுவதும் காரைநகர் பாடசாலைகளிற்கான உதவியை வளங்கிய நிலையில் நிலைத்திருக்கும்.

உண்மையும் சத்தியமும் என்றும் அழியாது.

– எனது ஊர் காரைநகர்.

Leave a Reply

மேலதிக செய்தி | More News & Related Stories

2026ம் ஆண்டுக்கான 5ம் தர புலமைப்பரீட்சை முடிவுகள் 02.09.2026 மாலை நான்கு மணிளவில் வெளியாகியுள்ளது. காரைநகர் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் பெற்றோர்கள் மிக கவனமாக செயற்படுங்கள்.

2026ம் ஆண்டுக்கான 5ம் தர புலமைப்பரீட்சை முடிவுகள் 02.09.2026 மாலை நான்கு மணிளவில் வெளியாகியுள்ளது. காரைநகர் பாடசாலை அதிபர்கள்,...

31.08.2026 இன்று திங்கள்கிழமை காரைநகர் அபிவிருத்தி சபை பல்கலைக்கழக அனுமதி பெற்ற தேவையுடைய மாணவிக்கு மடிக்கணணி வளங்கியுள்ளது.

காரைநகர் அபிவிருத்தி சபை ஊடாக தொடரட்டும் கல்விக்கான பணிகள். 31.08.2026 இன்று திங்கள்கிழமை காரைநகர் அபிவிருத்தி சபை பல்கலைக்கழக...

வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் ஆறு பல்கலைக்கழக மாணவர்கள் , கல்விக்காக இன்னொருவரின் உதவிகளை வேண்டி நிற்கிறார்கள்.

காரைநகர் அபிவிருத்தி சபை செய்தி. காரைநகரில் இருந்து இந்த ஆண்டு 20 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியிருந்தார்கள். அவர்களில் ஆறு...

காரைநகர் பெரியடைப்பு வீட்டுத்திட்ட உதவிக்கான இறுதி வேண்டுகோள். 26.08.2026

காரைநகர் பெரியடைப்பு வீட்டுத்திட்ட உதவிக்கான இறுதி வேண்டுகோள். 26.08.2026 இந்த ஆண்டு(2026) ஜனவரி 21ம் திகதி காரைநகர் பெரியடைப்பில்...

Advertisements

NSK Bus Booking Tel : 0777 290 605
NSK Bus Booking Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605