நாள் : Monday, September 7, 2026
--:--:--
👁️
Awareness

ஊடகவியலாளர்களிற்கான புதிய நடைமுறைகளை அறிமுகம் செய்கின்ற அநுர அரசிற்கு நன்றியும் வாழ்த்துக்களும்..!

ஊடகவியலாளர்களிற்கான புதிய நடைமுறைகளை அறிமுகம் செய்கின்ற அநுர அரசிற்கு நன்றியும் வாழ்த்துக்களும்..!

இலங்கையின் பிரதான ஊடகங்கள் முகநூல், youtube செய்திகளையே பிரதான செய்திகளாக வெளியிடும் நிலமைக்கு வந்துள்ளதையும் அந்த செய்தி பொய்யானது என்பதையும் கடந்த வாரம் இலங்கையின் பிரதான செய்திப்பத்திரிகையில் இருந்து வெளியான முழுப்பக்க செய்தி ஒன்றில் இருந்து அறிந்து கொண்டேன்.

வெளிநாட்டு செய்திகள் என்னும் பக்கத்தில் கனடிய செய்தியாக யாழ்ப்பாணத்தின் பிரதான தினசரி செய்திப்பத்திரிகையில் கனடாவில் மிகப்பெரும் ஸ்தாபனம் ஒன்றில் விற்கப்படும் Shampoo ஒன்று மீளப்பெறப்படுவதாகவும், அதில் கிருமிகள் உள்ளதாகவும் அதனால் அதனை மீளப்பெறுவதாகவும், அந்த ஸ்தாபனத்தின் படம் உட்பட அந்த Shampoo உட்பட செய்தி வெளியிட்டிருந்தது. அந்த செய்தியானது Youtube ஊடாக முற்றிலும தவறான செய்தி.

அது மட்டுமல்ல அந்த செய்தி Youtube இல் இருந்து பெறப்பட்டதுடன் அதனை உறுதிப்படுத்திக்கொள்ள அந்த பத்திரிகை நிறுவனம் எங்கேயும் தனது ஊடகவியலாளர்களை வைத்திருப்பதுவும் இல்லை.

ஊடகவியலாளர்களை வைத்துக்கொள்ளாமலே செய்திகளை களவெடுத்து தமது வியாபாரங்களை அதுவும் செய்திப்பணியில் மக்களை மடையர்களாக்க முடியும் என்பதை இலங்கையில் பிரபலமான நிறுவனங்களும் செயற்படுகின்றன.

முகநூல், Youtube ஊடாக யாரோ உத்தரவாதமின்றி பதிவிடும் செய்திகளை ‘எனது ஊர் காரைநகர்’ எடுத்து வருவதில்லை. அவ்வாறு எடுத்துவரும் பட்சத்தில் அதனை மேற்கோள்காட்டியும் அல்லது நேரடியாக Tag செய்தும் தான் வந்துள்ளது.

சொந்த முயற்சியால் ஊடகவியலாளர்கள் மற்றும் செய்தியாளர்கள், தகவல் தெரிவிப்பாளர்களைக்கொண்டும் கடந்த 20 வருடங்களாக செயற்பட்டுவரும் ‘எனது ஊர் காரைநகர்’ உண்மை நிலமைகளை அறிந்து கொள்ளாது எந்த செய்திகளையும் அவசரப்பட்டு வெளியிட்டது இல்லை. தொடர்புகளை மேற்கொண்டு, முடிந்தால் புகைப்படங்கள் மூலமாகவும் உறுதிப்படுத்திக்கொண்டதன் பின்னரே செய்திகளை வெளியிட்டு வந்துள்ளது.

ஆனாலும் இன்று செய்திகளை, படங்களை களவெடுத்து அல்லது இன்னொரு ஊடகவியலாளர் வெளியிட்ட செய்திகளை, படங்களை எந்தவித அறிவிப்போ அன்றி ‘நன்றி’ என்கிற வார்த்தையோ அன்றி தாமாக செய்தி திரட்டியது போன்றும், தமது ஊடகவியலாளர் படம் எடுத்தது போன்றும் ஊடகத்திருட்டுக்கள் மலிந்து போயுள்ளது இன்றைய காலத்தில்.

ஊடகத்திருட்டிலே ஈடுபடுபவர்களால் ஊரிற்காக எந்த நன்மையை செய்துவிட முடியும்.

‘முட்டை போடும் கோழிகளிற்கு தான் தெரியும் அதன் வலி’ ஆனாலும் என்னவோ சேவல்களிற்கு தான் கிராக்கி அதிகம்.

‘எனது ஊர் காரைநகர்’ உடன் போட்டிக்காக எவருமே இல்லை. காரணம் செய்திகளை சொல்வதால் மட்டும் மக்களிடத்தில் ‘எனது ஊர் காரைநகர்’ 20 வருட காலங்கள் நிலைத்து நிற்கவில்லை, ‘எனது ஊர் காரைநகர்’ எடுத்துக்கொண்ட அனைத்து முயற்சிகளும் வெற்றி பெற்றன. அதில் ‘எனது ஊர் காரைநகர்’ ‘Costco’ இல் உழைத்த பணத்தின் பெரும்பகுதி வியர்வையோடு கலந்திருந்து என்பதால் தான்.

Leave a Reply

மேலதிக செய்தி | More News & Related Stories

2026ம் ஆண்டுக்கான 5ம் தர புலமைப்பரீட்சை முடிவுகள் 02.09.2026 மாலை நான்கு மணிளவில் வெளியாகியுள்ளது. காரைநகர் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் பெற்றோர்கள் மிக கவனமாக செயற்படுங்கள்.

2026ம் ஆண்டுக்கான 5ம் தர புலமைப்பரீட்சை முடிவுகள் 02.09.2026 மாலை நான்கு மணிளவில் வெளியாகியுள்ளது. காரைநகர் பாடசாலை அதிபர்கள்,...

31.08.2026 இன்று திங்கள்கிழமை காரைநகர் அபிவிருத்தி சபை பல்கலைக்கழக அனுமதி பெற்ற தேவையுடைய மாணவிக்கு மடிக்கணணி வளங்கியுள்ளது.

காரைநகர் அபிவிருத்தி சபை ஊடாக தொடரட்டும் கல்விக்கான பணிகள். 31.08.2026 இன்று திங்கள்கிழமை காரைநகர் அபிவிருத்தி சபை பல்கலைக்கழக...

வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் ஆறு பல்கலைக்கழக மாணவர்கள் , கல்விக்காக இன்னொருவரின் உதவிகளை வேண்டி நிற்கிறார்கள்.

காரைநகர் அபிவிருத்தி சபை செய்தி. காரைநகரில் இருந்து இந்த ஆண்டு 20 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியிருந்தார்கள். அவர்களில் ஆறு...

காரைநகர் பெரியடைப்பு வீட்டுத்திட்ட உதவிக்கான இறுதி வேண்டுகோள். 26.08.2026

காரைநகர் பெரியடைப்பு வீட்டுத்திட்ட உதவிக்கான இறுதி வேண்டுகோள். 26.08.2026 இந்த ஆண்டு(2026) ஜனவரி 21ம் திகதி காரைநகர் பெரியடைப்பில்...

Advertisements

NSK Bus Booking Tel : 0777 290 605
NSK Bus Booking Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605