நாள் : Friday, September 4, 2026
--:--:--
👁️
Awareness

2026ம் ஆண்டுக்கான 5ம் தர புலமைப்பரீட்சை முடிவுகள் 02.09.2026 மாலை நான்கு மணிளவில் வெளியாகியுள்ளது. காரைநகர் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் பெற்றோர்கள் மிக கவனமாக செயற்படுங்கள்.

2026ம் ஆண்டுக்கான 5ம் தர புலமைப்பரீட்சை முடிவுகள் 02.09.2026 மாலை நான்கு மணிளவில் வெளியாகியுள்ளது. காரைநகர் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் பெற்றோர்கள் மிக கவனமாக செயற்படுங்கள்.

இது உங்களின் திறமைகளை நிரூபிப்பதற்கான ஓட்டப்பந்தயம் அல்ல.

உதாரணமாக,,, உங்கள் பாடசாலையில் ஒன்றோ இரண்டோ, நாலோ பத்தோ மாணவர்கள் வெட்டுப்புள்ளியாக நியமிக்கப்பட 133 க்கும் மேற்பட்ட புள்ளிகளை பெற்றவர்களை வெற்றி பெற்றவர்களாக கொண்டாடுவதை தவிர்த்துக்கொள்ளுங்கள்.

இதுவும் ஒரு அரசின் தந்திரம். கடந்த காலங்களில் 155 முதல் 165 வரையான வெட்டுப்புள்ளிகள் நியமிக்கப்பட்ட காலங்களில் காலங்களில் கூட 30 க்கும் மேற்பட்ட மாணவர்கள் புலமைச்சித்தி பெற்றிருக்கிறார்கள்.

எனக்கு தெரிந்தளவில் இந்த ஆண்டு 133 என மிக்க்குறைந்தளவிலான வெட்டுப்புள்ளிகளை தீர்மானித்து கல்வியின் தரம் உயர்திருப்பதாக காட்டிக்கொள்ளும் இன்னொரு யுக்தியாக இது இருக்கலாம்.

எனவே மிக்க்குறைந்தளவில் புலமைச்சித்தி புள்ளி நியமிக்கப்பட்டதன் ஊடாக இலங்கையில் கல்வித்தரம் குறைந்துள்ளது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

கல்வித்தரம் உயர வேண்டுமாயின் முதலில் வெட்டும்புள்ளி 133 என்பது ஒரு பாடத்திற்கு சராசரியாக 66% என்பது எந்த நாட்டிலும் புலமைச்சித்தி இல்லை என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் இந்த வெட்டுப்புள்ளியின் பின்னால் உள்ள அரசியலையும் விளங்கிக்கொள்ளும் அளவில் இனிவரும் காலத்தில் மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்த பெருமளவில் பாடுபடவேண்டும் என்பது மட்டும் இப்போது புலனாகிறது.

கொண்டாட்டத்திற்கு தயாராகாதீர்கள். சிந்திக்க வேண்டிய விடயங்கள் உங்கள் முன் காத்திருக்கின்றன.

மேற்படி பொதுப்புத்தி சார்ந்த ஒரு செய்தியை தெரிவித்ததன் பின்னர் சில நிமிடங்களிலேயே அரசின் கல்வித்திணைக்களம் சார்ந்த ஒருவர் ஏற்கனவே தயார்படுத்தியது போன்று விடிந்தும் விடியாத பொழுதில் ஊடகவியலாளர்களிற்கு பேட்டி வளங்கியுள்ளார்.

கடந்த வருடத்தைவிட 2.5% விகிதம் அதிகமானவர்கள் புலமைப்பரிட்சையில் புலமைச்சித்தி பெற்றுள்ளார்களாம்.

குறைந்த பட்சம் ஒரு பாடத்திற்கு 75% என தீர்மானித்தாலும் 150 புள்ளிகளிற்கு மேல் வெட்டுப்புள்ளி தீர்மானிக்கப்பட்டால் கடந்த வருடத்தைவிட 10% குறைவான மாணவர்களே புலமைப்பரிச்சையில் சித்தி பெற்றிருப்பார்கள்.

85% விகிதத்திற்கு மேல் புள்ளி பெற்றலே விசேட சித்தியாக கருதப்படும் மேற்கத்தைய நாடுகளில் 93 – 95% விகிதமே புலமைச்சித்தியாக கருதப்படும் இந்த காலத்தில் 66% விகிதம் என்பது just pass என்பதே.

புலமைச்சித்தி என்னும் ‘புலுடா’ கல்வித்தரம் கடந்த இரண்டு ஆண்டுகளில் பாரதூரமாக வீழ்ச்சி அடைந்துள்ளது என்பது அப்பட்டமான உண்மை.

Leave a Reply

மேலதிக செய்தி | More News & Related Stories

31.08.2026 இன்று திங்கள்கிழமை காரைநகர் அபிவிருத்தி சபை பல்கலைக்கழக அனுமதி பெற்ற தேவையுடைய மாணவிக்கு மடிக்கணணி வளங்கியுள்ளது.

காரைநகர் அபிவிருத்தி சபை ஊடாக தொடரட்டும் கல்விக்கான பணிகள். 31.08.2026 இன்று திங்கள்கிழமை காரைநகர் அபிவிருத்தி சபை பல்கலைக்கழக...

வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் ஆறு பல்கலைக்கழக மாணவர்கள் , கல்விக்காக இன்னொருவரின் உதவிகளை வேண்டி நிற்கிறார்கள்.

காரைநகர் அபிவிருத்தி சபை செய்தி. காரைநகரில் இருந்து இந்த ஆண்டு 20 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியிருந்தார்கள். அவர்களில் ஆறு...

காரைநகர் பெரியடைப்பு வீட்டுத்திட்ட உதவிக்கான இறுதி வேண்டுகோள். 26.08.2026

காரைநகர் பெரியடைப்பு வீட்டுத்திட்ட உதவிக்கான இறுதி வேண்டுகோள். 26.08.2026 இந்த ஆண்டு(2026) ஜனவரி 21ம் திகதி காரைநகர் பெரியடைப்பில்...

பூனைக்கு மணி கட்டுவது யார்..? என்று சிந்திக்காதீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் சிறிய தொகையாக 100 ரூபா(இலங்கை ரூபா) ஆக இருந்தாலும் காரைநகர் அபிவிருத்தி சபையின் இந்த பணியினை நம்பினால் கொடுங்கள்.

பூனைக்கு மணி கட்டுவது யார்..? என்று சிந்திக்காதீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் சிறிய தொகையாக 100 ரூபா(இலங்கை ரூபா) ஆக...

Advertisements

NSK Bus Booking Tel : 0777 290 605
NSK Bus Booking Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605