காரைநகர் வலந்தலை மருதடி வீரகத்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவம் முதன் முறையாக ஆவணி விநாயகர் சதுர்த்தி நன்னாளை தீர்த்தோற்சவமாகக்கொண்டு 06.09.2026 ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
காரைநகர் வலந்தலை மருதடி வீரகத்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவம் முதன் முறையாக ஆவணி விநாயகர் சதுர்த்தி நன்னாளை தீர்த்தோற்சவமாகக்கொண்டு 06.09.2026 ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
1988ம் ஆண்டு முதல் வைகாசி பெளர்ணமி நன்னாளை தீர்த்தோற்சவமாகக்கொண்டு நடைபெற்று வந்த வருடாந்த மகோற்சவம் இந்த வருடம் மார்ச் 25ம் திகதி நடைபெற்ற கும்பாபிஷேகத்தின் பின்னர் மகோற்சவ திருவிழாக்காலம் ஆவணிக்கு மாற்றம் பெற்றுள்ளது.
ஆவணி சதுர்த்தி நன்னாளை தீர்த்தோற்சவமாகக்கொண்டு மருதடி வீரகத்தி விநாயகர் ஆலய மகோற்சவம் இனிவரும் காலங்களில் தொடரும் எனவும் திரு.இராமநாதன் சிவசுப்பிரமணியம் தலைமையிலான பொறுப்புரிமையாளர் சபை தீர்மானித்துள்ளது.
06.09.2026 ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமான மகோற்சவம் 13.09.2026 ஞாயிற்றுக்கிழமை தேர்த்திருவிழாவும் மறுநாள் ஆவணி சதுர்த்தி அன்று தீர்த்தோற்சவமும் நடைபெற்று 10ம் நாள் வைரவர் மடையுடன் மகோற்சவம் நிறைவு பெறும்.
கும்பாபிஷேகத்தின் பின்னர் மிகவிமர்சையாகவும் பக்தி பூர்வமாகவும் நடைபெறும் மகோற்சவத்தில் அடியவர்கள் அனைவரும் கலந்து கொண்டு விநாயகப்மெருமானின் அருட்கடாட்சத்தை பெற்று இன்புற்று வாழ அழைக்கிறார்கள் பொறுப்புரிமை சபையினர்.
படங்கள்: நன்றி நடராசா பரம்சோதி.

Leave a Reply
You must be logged in to post a comment.