காரைநகர் இந்துக்கல்லூரி விளையாட்டு மைதானத்தின் சுற்று மதில் பணி நிறைவு பெற்றுள்ளது.
பிரித்தானியா காரை நலன்புரிச் சங்கம் 356 அடி நீளமான கிழக்கு மற்றும் தெற்குப்புற பகுதியினையும், அமரர்களாக காரைநகர் சம்பந்தர்கண்டியை சேர்ந்த சோமசுந்தரம் மற்றும் பரமேஸ்வரி தம்பதிகளின் ஞாபகர்த்தமாக கனடாவில் வதிபவரும் கனடா காரை கலாசார மன்றத்தின் போஷகர்களில் ஒருவருமான திரு.சோமசுந்தரம் கணேசபிள்ளை மற்றும் இலண்டனில் வதியும் சோமசுந்தரம் சரோஜினிதேவி அவர்களினால் 350 அடி நீளமான மேற்கு மற்றும் தெற்குப்புற ஒரு பகுதி மதில் சுவர்களும் கட்டி வழங்கப்பட்டுள்ளன. இப்பணிகளை நேரடியாக பாடசாலையின் முன்னாள் விளையாட்டுத்துறை ஆசிரியரும், அதிபரும் காரைநகர் சேவையாளருமான திரு.எஸ்.கே.சதாசிவம் அவர்கள் முன்னின்று செயற்படுத்தியும் வைத்துள்ளார்.
மேலும் செய்திகள் விபரம் என்பன டிசம்பர் மாதம் கனடாவில் இருந்து வெளிவரவுள்ள ‘எனது ஊர் காரைநகர்’ சஞ்சிகையில் எதிர்பாருங்கள்.




Leave a Reply
You must be logged in to post a comment.